search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி வரி மோசடி"

    வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதானார்கள்.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதனை கண்காணிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்காக நாடு முழுவதும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக வடசென்னை ஜி.எஸ்.டி. வரி கமி‌ஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக சீனிவாசலு, போஸ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களது நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காட்டி இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்தே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.569 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #GST
    போலி நிறுவனங்களை தொடங்கி ஜி.எஸ்.டி. வரி ரூ.40 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்த பின்னர், அதனை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியை கட்டுபவர்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு ஒன்று தனியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பிரிவு, ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், சென்னை மற்றும் மதுரையில் போலியான நிறுவனங்களை நடத்தி ஜி.எஸ்.டி. வரியை தாக்கல் செய்தது போல கணக்கு காட்டி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரையில் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் இதில் 2 பேர் போலியான கம்பெனிகளின் பெயரில் பொருட்களை வாங்கியது போலவும், அந்த பொருட்களை கொண்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது போலவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஒரு கம்பெனியை கூட தொடங்காமல் 30 கம்பெனிகளை தொடங்கி நடத்தியது போன்று கணக்கு காட்டியுள்ளனர். இதற்காக தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.220 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்தது போல கணக்கு காட்டியுள்ளனர்.

    தொழில் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு ஏற்ப தொழில் முனைவோர் உள்ளீட்டு வரி வரவை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) திரும்ப பெற முடியும், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த பணம் வரி வருவாயாக திரும்ப கிடைக்கும்.

    அந்த வகையில்தான் சென்னையை சேர்ந்த 2 பேர் ரூ.220 கோடி ஜி.எஸ்.டி. வரியை கட்டியதாக ஏமாற்றி ரூ.40 கோடி ரூபாயை மோசடியாக பெற்றுள்ளனர்.

    இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதன் பின்னணியில் மேலும் சிலர் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரி மோசடியை தடுப்பதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய 5 இடங்களில் தனித்தனியாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதுவையிலும் தனியாக ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதுபோன்று செயல்படுபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

    போலி விலைப்பட்டியல் மூலம் சென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்த பெண் தொழில் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GST

    சென்னை:

    சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் பூனம் சர்மா. இவர் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் இயக்குனராக இருக்கிறார்.

    இந்த நிறுவனங்களுக்கு பொருட்கள் எதுவும் வாங்காமல் போலி விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி விலைப்பட்டியல் தயாரித்து தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் ரூ.43 கோடியே 52 லட்சம் ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஜி.எஸ்.டி. இயக்குனரக சென்னை வடக்கு முதன்மை கமி‌ஷனர் ராகேஷ் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி மோசடி சட்டத்தின் கீழ் பூனம் சர்மா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் இவரையும் சேர்த்து சென்னையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வர்த்தகர் தனராம் என்பவர் கைது செய்யப்பட்டார். 29-ந்தேதி திலீப்குமார் (45). கைதானார். இவர் ஸ்டீல், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தோல் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். #GST

    ×